குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடும் மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. சென்னைப் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் திருச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் அளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதேபோல் கோவை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுக்க இந்த விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கொரோனா பாதிப்பால் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதிகளை அளித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊழியர்களின் நலன் கருதியும்...
-
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில்...
-
கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எதை செய்ய வேண்டும் ? என்பதையும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் எப்படி கையாளப்படுகிறார்கள் ? என்பதையும் ச...
-
#BlockBusterRemo after tremendous and record breaking collections,screens and shows increasing all over from today.setting new Records&#...
-
திருமணமாகி பல மாதங்களாக முதலிரவு நடக்காத நிலையில், முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்...
-
உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, தற்போது சீனாவில் கட்டுக்குள் வந்து நோயாளிகள் குறைந்து வருகின்றன. ஆனால் மற்ற நாடுகள...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
-
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல...
-
மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவ...
-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ...
No comments:
Post a Comment