பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், திருத்தப்பட்ட சட்டம் மூலம் வழங்கும் குடியுரிமை தங்களுக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அல்லாத பிறருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. இந்து, புத்தம், கிறிஸ்துவம், பார்சி, சமணம் என எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் இந்தியக் குடியுரிமை கிடைக்க உதவுகிறது. ஆனால் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்க்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவருக்கும் எந்தவித ஆணவணத்தையும் சமர்ப்பிக்காமலே குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இந்நிலையில், இதை எதிர்த்துள்ள பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ராஜா அசார் மங்களானி, "பாகிஸ்தானிய இந்துக்கள் ஒருமித்த கருத்துடன் இந்தியாவின் குட???யுரிமைச் சட்டத்திருத்தத்தை நிராகரிக்கிறோம். இது சமூகப் பாகுபாடுகளால் இந்தியாவை பிரிவினையை நோக்கி இட்டுச்செல்லும்" எனக் கூறியிருக்கிறார். "இது இந்தியப் பிரதமர் மோடிக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தான் இந்துக்களின் ஒருமித்த கருத்து. உண்மையான இந்துவால் இந்தச் சட்டத்தை ஒருபோது ஆதரிக்க முடியாது." எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே இந்தச் சட்டம் மீறியிருக்கிறது எனவும் அவர் விமர்சித்தார். இது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் எனத் தெளிவாகத் தெரிகிறது என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டீன் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் சீக்கிய சமூகத்தினரும் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பை கூறியுள்ளனர். "பாகிஸ்தான் சிக்கியர்கள் மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள சீக்கிய சமுதாயமும் இதனைக் கண்டிக்கிறது" என பாபா குரு நானக் அமைப்பின் தலைவர் கோபால் சிங் குறிப்பிட்டுள்ளார். "இந்தியாவிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி சிறுபான்மையினராகவே உள்ளனர். அவர்களில் ஒருவர் என்ற முறையின் முஸ்லிம்களின் அச்சத்தைப் புரிந்துகொள்கிறேன்." எனவும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இதோ இப்படி குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடக்கிறாரே.. இவர்தான் 11 வயது பெண்ணை வயக்காட்டில் வைத்து பாலியல் தொல்லை தந்தவர்.. மக்கள் கும...
-
Kollywood Superstar Darbar Rajinikanth Police get-up PNG file download free
-
#Glamours Indian Girl Pooja Hegde Hot In Blue Half Saree At Audio Launch #Actress
-
கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த பெண் ஐந்து மாத கர்ப்பிணிய...
-
Just days before it was to be released the Censors demanded that the makers of Cheat India attach the word ‘Why’ to its title, presumably ...
-
#Marudhu அமோக வெற்றி! | 25-வது நாள் @VishalKOfficial @i_Sri_Divya @dir_muthaiya @ActorSoori @immancomposer
-
கடைசியில் இந்த கொரோனா அன்புமணியை டீ போட வைத்துவிட்டதே என்று நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.. லுங்கியை இழுத்து மடித்து கட்ட...
-
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு! - பிரதமர் மோடி #CoronaVirus | #COVID19 | #Coronaviru...
No comments:
Post a Comment