Showing posts with label tamil online news. Show all posts
Showing posts with label tamil online news. Show all posts

Friday, December 13, 2019

ரஜினியை கைகழுவிய மோடி !

எழுபதாவது பிறந்த நாளை எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார் ரஜினி.

 அதாவது ரஜினி சார்பில் முதன்முதலாக லதா ரஜினிகாந்த் எல்லோருக்கும் இனிப்பு வழங்கியிருக்கிறார். வழக்கமாக ரஜினி வீட்டு வாசலில் காத்திருக்கும் நிருபர்களுக்கும் ரசிகர்களுக்கும் குடிக்க தண்ணீர்கூட தரமாட்டார்கள். இந்த ஆண்டு புதுமையாக இனிப்பு வழங்கியது அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. இந்த நிலையில், அதிகாலை முதல் எதிர்பார்த்த வாழ்த்து அழைப்பு மட்டும் வரவே இல்லை என்பதுதான் ரஜினியின் பெருங்கவலையாக மாறியிருக்கிறது.


ஆம், கடந்த மூன்று ஆண்டுகளாக ரஜினிகாந்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பவர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி. அவர் இந்த ஆண்டு வாழ்த்து சொல்லவில்லை என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.


அவர் மட்டுமல்ல மோடியின் தமிழகப் பிள்ளைகளான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களும் வாழ்த்து சொல்லவில்லை. ரஜினிக்கு நாட்டின் உயர் விருது கொடுத்த பிறகும், அவர் இன்னமும் அமைதியாக இருப்பதை கண்டு பா.ஜ.க. கடுப்பாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பிரச்னை என்றால் ரஜினிகாந்த் என்ன செய்வார் என்று அவரது நெருங்கிய தோழர் ஒருவர் சொல்லும் தகவல் என்ன தெரியுமா?

எந்த நேரமும் பா.ஜ.க.வின் திட்டம் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவாக ரஜினி பேசுவார் என்கிறார்கள்.
அதையும்தான் பார்த்துவிடலாம்.

பெண் பார்க்க வந்ததோ அக்காவை..! ஆனால் மாப்பிள்ளை கற்பழித்ததோ தங்கையை!

ஐதராபாத்: அக்காவை பெண் பார்க்க வந்த இளைஞர் தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் 2 பேர், நிஜாமாபாத் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியபடி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில், மூத்தவர் ஆன்லைன் திருமண இணையதளத்தில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதன்பேரில் விசாகப்பட்டினம், நதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்சந்து என்பவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.



கடந்த 30ம் தேதி பெண் பார்க்க ஜெய்சந்து நேரில் வந்திருக்கிறார். இதையொட்டி, அந்த பெண் பியூட்டி பார்லர் சென்றுவிட்டதால், வீட்டில் தங்கை மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அக்காவை பெண் பார்க்க வந்த ஜெய்சந்து, தங்கையின் அழகில் மயங்கியுள்ளார். இதையடுத்து, நைசாக பேசியபடி வீட்டின் உள்ளே நுழைந்து, தங்கையை அடித்து உதைத்துள்ளார். பிறகு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டாராம்.


இதற்கிடையே, பியூட்டி பார்லர் சென்றுவிட்டு வீடு திரும்பிய அக்கா, தனது தங்கையின் அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்கையை மயக்கம் தெளிய வைத்து விசயத்தை கேட்டுள்ளார். இதன்பேரில் நிஜாமாபாத் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். விரைந்து செயல்பட்ட போலீசார், கர்நாடகா மாநிலம், குல்பர்காவில் பதுங்கியிருந்த ஜெய்சந்துவை கைது செய்தனர்.


கடந்த 30ம் தேதி பெண் பார்க்க ஜெய்சந்து நேரில் வந்திருக்கிறார். இதையொட்டி, அந்த பெண் பியூட்டி பார்லர் சென்றுவிட்டதால், வீட்டில் தங்கை மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அக்காவை பெண் பார்க்க வந்த ஜெய்சந்து, தங்கையின் அழகில் மயங்கியுள்ளார். இதையடுத்து, நைசாக பேசியபடி வீட்டின் உள்ளே நுழைந்து, தங்கையை அடித்து உதைத்துள்ளார். பிறகு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டாராம்.


இதற்கிடையே, பியூட்டி பார்லர் சென்றுவிட்டு வீடு திரும்பிய அக்கா, தனது தங்கையின் அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்கையை மயக்கம் தெளிய வைத்து விசயத்தை கேட்டுள்ளார். இதன்பேரில் நிஜாமாபாத் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். விரைந்து செயல்பட்ட போலீசார், கர்நாடகா மாநிலம், குல்பர்காவில் பதுங்கியிருந்த ஜெய்சந்துவை கைது செய்தனர்.


Popular Posts